பாஜக கூட்டணியை வீழ்த்த திமுகவும் எடப்பாடியும் கள்ள உறவு.! அதிமுக 3வது இடமே பிடிக்கும்- டிடிவி தினகரன் அதிரடி

By Ajmal KhanFirst Published Apr 24, 2024, 8:56 AM IST
Highlights

நாடாளுன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என வேலை பார்த்ததாகவும் கூறினார்.  வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினார். 
 

பலவீனமான நிலையில் அதிமுக

நாடாளுன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிவடைந்துள்ள நிலையில், திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயாலளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர்,  ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் இன்று பலவீனமாகியிருக்கிறது.  அதிமுகவை அபகரித்து வைத்திருப்பவர்கள் தலைவராக முடியுமா? என கேள்வி எழுப்பியவர்,   எடப்பாடி பழனிச்சாமி தன்னை தலைவர் என போட்டுக்கொண்டால் தலைவராக முடியாது என கூறினார்.

 இபிஎஸ்-ன் தலைமையிலான சிலரின் சுயநலத்தினால் பதவி வெறியால்  துரோக புத்தியால் அதிமுக  வியாபார நிறுவனமாக செயல்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.  பழனிச்சாமியின் 4அரை  ஆண்டுகால ஆட்சி மீதான கோபத்தின் காரணமாகவும் திமுக திருந்திருக்கும் என்று தான் மக்கள் திமுகவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் திமுக இன்னமும் திருந்தாமல் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.  

இந்து - இசுலாமியர்கள் இடையே கலவரத்தைத் தூண்டும் பிரதமர் மோடி.. இது மதவெறியின் உச்சம்.. கொதிக்கும் சீமான்!

எடப்பாடியும் திமுகவும் கள்ள உறவு

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் வியாபாரம்  ஆளும் கட்சியினரின்  உதவியுடன் நடைபெறுகிறது. இதனை தடுக்கவேண்டிய திமுக அரசு போதைமருந்து புழக்கங்களை வேடிக்கை பார்க்கிறது. இன்னும் என்னவெல்லாம் விசித்திரமான நிகழ்வுகளெல்லாம் இந்த ஆட்சியில் நடக்க இருக்கிறதோ என அச்சம் தெரிவித்தார். நாடாளுன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும் திமுகவும் கள்ள உறவு வைத்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிடக்கூடாது என வேலை பார்த்ததாகவும் கூறினார்.  வாக்குகளை பிரிப்பதற்காக இரட்டை இலை சின்னத்தை திமுகவிற்கு உதவி செய்வதற்காக பயன்படுத்தினர் எனவும் குற்றம்சாட்டினார். 

3ஆம் இடமே அதிமுக பிடிக்கும்

திமுக என்ற தீய சக்திக்கு எதிராகவும் துரோகத்திற்கு எதிராகவும் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று துரோகம் செய்வதற்காகவே ஒரு கும்பலால் பயன்படுத்தப்படுகிறது. அதிமுகவை அழிக்க நினைக்கும் கட்சி பாஜக அல்ல எனவும் குறிப்பிட்டார்.  தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் உறுதியாக வெற்றிபெறும், வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அதிமுக 40 தொகுதிகளிலும் முன்றாம் இடம்தான் பிடிக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். 

மோடி பேசியதில் என்ன தவறு இருக்கு? தி.க. மாவட்ட செயலாளரை போல் பிரிவினைவாத அரசியல் பேசும் ராகுல்-வானதி சீனிவாசன்

click me!