தினகரனின் செயல் எரிச்சலூட்டுகிறது! காண்டம் விளம்பரத்தை அதிகப்படுத்துங்கள்!: யார், யார் சொன்னது?

 
Published : Jan 26, 2018, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
தினகரனின் செயல் எரிச்சலூட்டுகிறது! காண்டம் விளம்பரத்தை அதிகப்படுத்துங்கள்!: யார், யார் சொன்னது?

சுருக்கம்

today exclusive political and cinema topics

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே. 
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...

*    டி.டி.வி. தினகரனின் பேச்சும், செயல்பாடும் டெல்லி அதிகார மையத்தில் உள்ளவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. -    ரவீந்திரன் துரைசாமி

*    பத்திரிக்கையாளர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ‘அரசியலுக்கு வந்துவிட்டீர்களா?’ என்பதுதான். ஆனால் நான் பிறந்ததில் இருந்தே தி.மு.க.தான். என் உடம்பில் திராவிட ரத்தம்தான் ஓடுகிறது.
-    உதயநிதி ஸ்டாலின்

*    சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஏற்கனவே சினிமாவில் நிறைய சம்பாதித்துவிட்டேன். நான் இடைத்தேர்தலில் போட்டியிட வந்ததும் பலரும் பயப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. 
-    விஷால்

*    ஆணுறை விளம்பரத்தை அடிக்கடி மீடியாக்களில் ஒளிபரப்ப வேண்டும். 
-    காஜல் அகர்வால்.

*    ஜெயலலிதாவோடு கருத்து மாறுபாடு உண்டுதான். ஆனாலும் அவர் பல நேரங்களில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை என்பதை பதிவிட நினைக்கிறேன். 
-    கனிமொழி 

*    சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் கார் துடைப்பது உள்ளிட்ட வீட்டு வேலை செய்தவர்கள்தான் தற்போது பதவிகளில் உள்ளனர். 
-    புகழேந்தி

*    சம்பள உயர்வு என்பது அரசு ஊழியர்களைப் போலவே எம்.எல்.ஏ.க்களுக்கும் அவசியமானது. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி உயர்வா? என கேட்பது அவர்களின் உழைப்பை கேவலப்படுத்துவதற்கு சமம்.
-    கோகுல இந்திரா

*    பனிரெண்டு ஆண்டுகளாக அம்மா வீட்டின் கதவை கூட தொட முடியாமல் இருந்தவர்கள் இப்போது தனியாக கட்சி நடத்த கிளம்பிவிட்டனர். அவர்களின் சின்னம் 20 ரூபாய்தான். 
-    ஜெ.சி.டி.பிரபாகரன்

*    போக்குவரத்து கட்டன உயர்வால் எங்கும் போராட்டம் கிளம்பியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. எனவே உடனே சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும். 
-    ஸ்டாலின்

*    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ஒரு வேளை பாதகமாக திர்ப்பு வந்தால், மேல்முறையீடுக்கு செல்ல மாட்டோம். இடைத்தேர்தலில் நாங்கள் நின்று மீண்டும் வெல்வோம்.
-    தங்கத்தமிழ் செல்வன்

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி