
முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து எழுந்தபிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இயதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்து உச்சகட்ட பரபரப்பு பறக்றது.
நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆளுனரை சந்தித்து தான் சசிகலாவால் மிரட்டப்பட்டதாகவும் அதனால் தான் பதவியை ராஜினாமா செய்ததாகவும் விளக்கமளித்தார்.
ஒருபுறம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வெளியே விடாமல் சசிகலா சிறைபிடித்து காத்து வருகிறார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,
தமிழகத்திற்கு என தனி ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைய நடவடிக்கை தேவைப்படுகிறது.
முடிவெடுக்க காலதாமதம் செய்வது குதிரை பேரங்களுக்கு வித்திட்டுவிடும்.
பேரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிலை ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம்.
இவ்வாறு அவர் கூறினார்.