உதயநிதி ஸ்டாலின் மீது திருட்டு புகார்.. அதிரடி காட்டிய பாஜக.. அதிரும் திமுக.

By Ezhilarasan BabuFirst Published Jun 28, 2022, 1:59 PM IST
Highlights

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திருட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கல்லை  அவர் திருடி விட்டதாகவும், எனவே உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக திருட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்ட வைக்கப்பட்டிருந்த செங்கல்லை  அவர் திருடி விட்டதாகவும், எனவே உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: இபிஎஸ்க்கு அதிகரிக்கும் ஆதரவு..! ஓபிஎஸ் அணியில் இருந்து தாவிய பொதுக்குழு உறுப்பினர்கள்

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. அரசு அறிவித்து வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளான அதிமுக பாஜக, அத்திட்டங்களை கடுமையாக  விமர்சித்து வருகின்றன. எனவே தொடர்ந்து திமுக பாஜக இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் உள்ள நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக அறியப்படும் உதயநிதி ஸ்டாலினை தற்போது பாஜகவினர் குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். 

குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்த பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை  தொடர்பாக ஒரு செங்கலில் எய்ம்ஸ் என எழுதி அவர் இதோ பாருங்கள் இதுதான் அதிமுகவின் அரசால் கொண்டுவரப்பட்ட எய்ம்ஸ் திட்டம் என பேசியது மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி திமுகவின் வெற்றிக்கு உதயநிதியின் இது போன்ற பிரச்சாரம் ஒரு காரணமாக  அமைந்தது.

இதையும் படியுங்கள்: ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!

இந்நிலையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் கணேசன் இல்லத் திருமண விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மணமக்கள் இருவரும் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது இப்போது பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல இருக்கக்கூடாது என்றார். அப்போது எய்ம்ஸ் செங்கல்லை நினைவுபடுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எய்ட்ஸ் கல்லைப்போல் நினைவு பரிசை திமுகவினர் வழங்கினர். அந்த பரிசைப் பார்த்த உதயநிதி ஸ்டாலின் சிரித்து மகிழ்ந்தார். 

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பாஜகவினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டையில்  பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர்.  அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த செல்கல்லை உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டை திமுக நிர்வாகிகள் திருடி விட்டனர்.  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த செங்கலை உதயநிதி திருடி விட்டார் என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த புகாரின்  அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!