
திவாகரன் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அவருக்கு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதில் நாளை காலை 11 மணிக்கு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், ஜோதிடர் என அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 9-ம் தேதி காலை வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
அதில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடும் அடங்கும். தஞ்சாவூரில் உள்ள திவாகரனின் வீடு மற்றும் அவரது கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் பல்வேறு ஆவனங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆவணங்கள் அடிப்படையில், திவாகரனுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில், நாளை காலை 11 மணிக்கு திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிறார் திவாகரன்.