ஜெ.படத்தை அகற்ற எப்படி உத்தரவிட முடியும்...? திமுகவிற்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்...!

Asianet News Tamil  
Published : Feb 16, 2018, 12:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
ஜெ.படத்தை அகற்ற எப்படி உத்தரவிட முடியும்...? திமுகவிற்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்...!

சுருக்கம்

The court can not interfere in the jurisdiction of the speaker

சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எந்த விதமான சட்டமும் இல்லாத நிலையில் ஜெயலலிதா படத்தை அகற்றும்படி எப்படி உத்தரவிட முடியும்? எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜெயலலிதா இறந்துவிட்ட நிலையில், இந்த வழக்கில் மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினாவில் நினைவகம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு நினைவகம் அமைக்க கூடாது மற்றும் அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க கூடாது என தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஜெயலலிதாவின் உருவப்படம், சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. இந்த படத்திறப்பு விழாவை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் திமுக சார்பில் முறையீடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் அதிகார வரம்புக்குள் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் எந்த விதமான சட்டமும் இல்லாத நிலையில் ஜெயலலிதா படத்தை அகற்றும்படி எப்படி உத்தரவிட முடியும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!