வரலாறுகள் மறைக்கப்படுகிறது , தமிழகத்தில் எதிர் பிரச்சாரம்...!! வேதனையில் வெடித்த ஆளுனர் தமிழிசை...!!

Published : Feb 28, 2020, 02:29 PM IST
வரலாறுகள் மறைக்கப்படுகிறது , தமிழகத்தில் எதிர் பிரச்சாரம்...!!  வேதனையில் வெடித்த ஆளுனர் தமிழிசை...!!

சுருக்கம்

தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது .  அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை நாட்டின் எல்லை கடந்து பரவியுள்ளது.   

தமிழகத்தின் வரலாறு மறைக்கப்பட்டு தவறுதலாக திரிக்கப்படுகிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் வேதனை தெரிவித்துள்ளார் .  தேச பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அமைப்பு மற்றும் புதுவை பல்கலைக்கழகம் சார்பில் மூன்று நாள் கருத்தரங்கு புதுவையில் தொடங்கியது . இம் மாநாட்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இக்கருத்தரங்கை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய அவர் இந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பழங்காலந்தொட்டே வர்த்தக கலாச்சார உறவு இருந்துள்ளது . ஆனால் வரலாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது .  இது ஒவ்வொன்றையும் மீட்டுருவாக்கம் செய்வது அவசியமாகும் .  தவறான தகவல் தொடர்புகளால் தமிழகத்திலும் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது .  அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜேந்திர சோழனின் பெருமை நாட்டின் எல்லை கடந்து பரவியுள்ளது.  

அதனால் தான் தற்போதைய அரசு மகாராஷ்டிர துறைமுகத்திற்கு ராஜேந்திரசோழன் பெயரை சூட்டியுள்ளது .  தமிழகத்தை பொறுத்தவரையில் எதிர்ப்பு பிரச்சார மிக அதிகமாக உள்ளது .  சில சக்திகள் நமது வரலாற்றை மறைத்து உள்ளன .  அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியது நமது கடமை ,  தமிழகத்தின் மகளாகிய நான் தெலுங்கானாவில் கவர்னராக உள்ளேன் அதற்காக பெருமை கொள்கிறேன் இவ்வாறு தமிழிசை பேசினார். 

 

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!