உச்சகட்ட பரபரப்பில் டிடிவி தரப்பு - நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது விசாரணை..

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 02:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
உச்சகட்ட பரபரப்பில் டிடிவி தரப்பு - நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது விசாரணை..

சுருக்கம்

TDV Dinakarans MLAs have resumed at the Madras High Court in the case of 18 disqualification.

டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகர் தனபால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார். 

இதுகுறித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் ஆனால் அடுத்த தீர்ப்பு வரும் வரை அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

இதனிடையே எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களின் 18 பேரின் பெயர்கள் அரசு இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பெரம்பூர் உள்ளிட்ட 18 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவும் டிடிவி தினகரன் தரப்பு மனுவும் ஒரே நேரத்தில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் தரப்பு மனு முதலில் விசாரிக்கப்படும் எனவும் நம்பிக்கை வாக்கெடுப்பு மனு பின்னர் விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்தது. 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 18 பேரின் தகுதி நீக்க நடவடிக்கை குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!
மறைந்தும் வாழும் கருப்பு எம்.ஜி.ஆர்.. 'கேப்டன்' விஜயகாந்த் நினைவிடத்தில் குவியும் அரசியல் தலைவர்கள்!