"என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்... ரத்ததானம் செய்யுங்கள்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

First Published Feb 26, 2017, 10:43 AM IST
Highlights
My birthday is on 1 March shawls insted of good and useful books provide the answer Nobody do not celebrate my birthday Banners must avoid causing trouble to the people


தன் பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் தன் தொண்டர்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

என் பிறந்தநாளான மார்ச் 1 அன்று சால்வைகளை போர்த்துவதற்கு பதில் நல்ல பயனுள்ள புத்தகங்களை வழங்குங்கள்.

என் பிறந்தநாளை யாரும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்.

மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

ரத்ததானம் செய்தல்,மரக்கன்று நடுதல், போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டும் என்று ஸ்டாலின் தன தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே தன் காலில் விழ யாரும் விழக்கூடாது, பேனர் வைக்ககூடாது போன்ற ஸ்டாலினின் அதிரடி அறிவிப்புகள் மக்களிடம் பாராட்டை பெற்ற நிலையில் அவரது இந்த அறிவிப்பு திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

click me!