கொலை நடக்காத நாட்களே இல்லை.!சர்வாதிகார ஆட்சியால் தமிழகம் தலை குனிந்து உள்ளது-திமுகவை விளாசிய ஆர்.பி. உதயகுமார்

By Ajmal KhanFirst Published Jun 8, 2023, 8:13 AM IST
Highlights

தமிழகத்தில் 9 மாதத்தில் மின் கட்டணத்தை இரண்டாவது முறையாக உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். 

திமுக அரசு பற்றாக்குறை அரசு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்  69 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் ,அம்மாபட்டியில் ஏழை,எளியோருக்கு  நலத்திட்ட உதவிகள், அன்னதானம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர் பி.உதயகுமார், எடப்பாடியாரின் பிறந்த நாளை விழாவை கழக அம்மா பேரவை மக்கள் பயன்பெறும் வண்ணம், வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை, மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை என ஒரு பற்றாக்குறை அரசாக திமுக அரசு திகழ்கிறது.  திமுக அரசின் சர்வாதிகார ஆட்சியால் தமிழகம் தலை குனிந்து உள்ளது  தமிழகத்தில் கொலை நடக்காத நாட்களே இல்லை. கடந்த நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்ததால் மக்கள் இதயங்களில் எடப்பாடியார் வாழ்ந்து வருகிறார். 

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இன்னும் பல ரயில் விபத்துகளுக்கு வாய்ப்பு - எச்.ராஜா எச்சரிக்கை

வரி விதிப்பால் மக்கள் பாதிப்பு

கொரோனா முதல் அலையின்போது மக்கள் உயிர்தான் முக்கியம் என்ன கருதி, 32 வருவாய் மாவட்டங்களில் நேரடியாக சென்று விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் சந்தித்து  ஆறுதல் கூறி மக்களின் கவசமாக எடப்பாடியார் திகழ்ந்தார் .கர்ணனுக்கு கவசகுண்டலம் போல் மக்களுக்கு உயர் கவசமாக எடப்பாடியார் திகழ்ந்தார். திமுகவை இரண்டு ஆண்டுகால ஆட்சியில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ,பால் விலை உயர்வு ,சாக்கடை வரி உயர்வு, என மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் 50 லட்சம் சிறு,குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். ஏற்கனவே கொரோனா காலங்களில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து  மீண்டு வர முடியாமல் கண்ணீர் வடிப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

வெந்த புண்ணில் வேல் பாய்சுவது

ஆனால் இந்த அரசு அதை கண்டு கண்ணீரை துடைப்பதற்கு எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை மேலும் சுமை ஏற்படுத்து வண்ணம் மின்கட்டணத்தை உயர்த்தியதால் சிறு,குறு நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேதனை உச்சமாக இருந்த இந்த மின் கட்டணத்தை, எடப்பாடியார் மீண்டும் இதை திரும்ப பெறவலியுறுத்தி, திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார். தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின் பேரிலே அடுத்த மாதம் முதல் மின்கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்து இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

கலைஞரின் பிறந்த நாளை இந்த நாளாக மாற்ற வேண்டும்.. மு.க ஸ்டாலினுக்கு வேண்டுகோளை விடுத்த திருமாவளவன்

click me!