
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியுள்ள நிலையில் ஓ.பி.எஸ். அணியினர் இணையதளம் மூலமாக பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்....
இதற்காக கணினி உயர் தொழில்நுட்பம் தெரிந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஓ.பி.எஸ். அளிக்கும் பரிந்துரைகளுக்கு ஏற்ப பல்வேறு மீம்ஸ்சுகளை வடிவமைத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
ஓ.பி.எஸ். அணியின் இந்த இணையவழிப் பிரசாரம் மக்களிடையே எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான விடை ஏப்ரல் 15 ஆம் தேதி தெரிந்துவிடும்