இவர்களுக்கு மட்டும் இ-பதிவு தேவையில்லை.. காவல் துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..

By Ezhilarasan BabuFirst Published May 19, 2021, 9:48 AM IST
Highlights

இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை. மேலும், அனுமதிக்கப்படுகின்ற மேற்கண்ட துறையினர் அனைவரும் தங்களது அடையள அட்டையை எளிதில் பார்க்கும் வண்னம் வெளிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், அறிவுரையின்படி தமிழக அரசால் ஊரடங்கில் அனுமதி வழங்கப்பட்ட மருத்துவர்கள், சுகாதார துறையினர், பத்திரிகை ஊடகத்துறையினர், அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய மாநில அரசு பணியாளர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வழக்குறைஞர்கள் பணி நிமித்தமாக செல்லும்போது, வாகனத் தணிக்கை இடங்களில் அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். 

இவர்களுக்கு இ-பதிவு தேவையில்லை. மேலும், அனுமதிக்கப்படுகின்ற மேற்கண்ட துறையினர் அனைவரும் தங்களது அடையள அட்டையை எளிதில் பார்க்கும் வண்னம் வெளிபடுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. முக்கிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் Ambulance வாகனங்கள் செல்வதற்கு பிரத்தியேகமாக தனி வழி எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்ப்படும் மேற்கண்ட துறையினர் மற்றும் அவர்களது வாகனங்கள் தடுக்கப்பட்டு அனுமதிக்க மறுக்கப்படும் நிலையில் தொடர்புக்கு சென்னை பெருநகர மக்கள் தொடர்பு உதவி ஆணையாளர் தொலைபேசி எண் 23452320 மற்றும் 9498130011 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

 

click me!