பாஜவில் குஷ்பு, ராதாரவி, செந்திலுக்கு புது அசைன்மெண்ட்.. தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..!

Published : Nov 17, 2021, 03:48 PM ISTUpdated : Nov 17, 2021, 03:51 PM IST
பாஜவில் குஷ்பு, ராதாரவி, செந்திலுக்கு புது அசைன்மெண்ட்.. தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..!

சுருக்கம்

சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி 11 மாவட்டங்களில் பாஜக சார்பில் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக பாரதிய ஜனதா மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையாக கனமழையாலும், அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தரவர்க்க மக்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். வீடுகளுக்குள் வெள்ளம் பாய்ந்து உடமைகள் பாழாகின. தினசரி வேலைவாய்ப்பை நம்பி இருப்பவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். எனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூ.5000 வீதம் தர வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

ஆகவே பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 11 மாவட்டங்களில் பா.ஜனதா கட்சியின் சார்பில் வருகிற வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்களில் கீழ்கண்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார்கள். மாவட்ட தலைவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் மற்றும் கலந்துகொள்ளும் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:-

காஞ்சிபுரம்-டால்பின் ஸ்ரீதர், லோகநாதன்

செங்கல்பட்டு- கரு.நாகராஜன், தங்ககணேசன்

திருவள்ளூர் கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி, தொழில் பிரிவு- பாஸ்கர்

திருவள்ளூர் மேற்கு- சக்ரவர்த்தி, அரசு தொடர்பு பிரிவு பாஸ்கரன்

சென்னை கிழக்கு- முன்னாள் எம்.எல்.ஏ. ராதா ரவி, மீனாட்சி நித்யசுந்தர்

தென்சென்னை- முன்னாள் எம்.பி. வி.பி.துரைசாமி, முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன்

மத்திய சென்னை கிழக்கு- நடிகை குஷ்புசுந்தர், வினோஜ் பி.செல்வம்

மத்திய சென்னை மேற்கு- பால்கனகராஜ், குமரிகிருஷ்ணன்

வடசென்னை கிழக்கு- நகைச்சுவை நடிகர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம்

வடசென்னை மேற்கு- சுமதி வெங்கடேஷ், காயத்ரி ரகுராம்

சென்னை மேற்கு- எம்.என்.ராஜா, ஆசிம்பாஷா இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Women's Reservation Bill: தமிழகத்தில் திமுக சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்கிறது.. மோடி குற்றச்சாட்டு
டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!