தி.மு.க.விலிருந்து வெளியேறி ம.தி.மு.க.வில் இணைந்து, அங்கிருந்து கோபித்துக் கொண்டு அ.தி.மு.க. சென்று, ஜெயலலிதா மரணத்துக்கு பின் தினகரனின் தளபதியாகி, அ.ம.மு.க. துவங்கப்பட்டதும் வெளியேறி, ‘அரசியல் போதும். நான் இனி இலக்கியம் வளர்க்கப்போகிறேன்!’ என்று சீன் போட்ட நாஞ்சில் சம்பத் இதோ யு டர்ன் அடித்து மீண்டும் தாய்க்கழகமான தி.மு.க.வில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டார்.