மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார்..! பொன்னாரிடம் கூறிய மூதாட்டி? உண்மையில் நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Apr 15, 2021, 11:47 AM IST
Highlights

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே பொன்னாரிடம் பேசிய மூதாட்டி ஒருவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்று கூறியதாகவும் இதனால் பொன்னார் வாயடைத்து போனதாகவும் வெளியாகியுள்ள தகவலின் உண்மை என்ன என தெரியவந்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே பொன்னாரிடம் பேசிய மூதாட்டி ஒருவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராவார் என்று கூறியதாகவும் இதனால் பொன்னார் வாயடைத்து போனதாகவும் வெளியாகியுள்ள தகவலின் உண்மை என்ன என தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் பொன்.ராதாகிருஷ்ணன். தேர்தல் முடிந்துள்ள நிலையில் தமிழகத்தின் முக்கயி கோவில்களுக்கு சென்று அவர் வழிபாடு நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் வழிபாடு நடத்திவிட்டு திரும்பினார். தன்னுடைய காரில் அவர் ஏறும் போது அங்கு வந்த மூதாட்டி ஒருவர் முதலில் பொன்னாரிடம் நலம் விசாரித்தார். பிறகு பொன்னாரும் அவரிடம் நலம் விசாரித்தார்.

அப்போது மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சரா வருவாரு, மதுரை மீனாட்சி அம்மனிடம் நான் வேண்டியுள்ளேன் நிச்சயமாக ஸ்டாலின் தான் அடுத்த முதலமைச்சர் என்று அந்த மூதாட்டி மிகவும் இயல்பாக கூறினார். இதனை கேட்டு எவ்வித அதிர்ச்சியும் அடையாத பொன்னார் அதனை இயல்பாக எடுத்துக் கொண்டு தனது காரில் ஏறிச் சென்றார். ஆனால் மூதாட்டி இயல்பாக கூறியதை அவர் ஏதோ பொன்னாரை வம்பிழுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கூறியதாக சில தொலைக்காட்சிகள் செய்தியாக ஒளிபரப்பின. அத்தோடு மூதாட்டி அப்படி கூறியதால் பொன்னார் வாயடைத்து போய்விட்டதாகவும் அந்த தொலைக்காட்சிகல் செய்தியில் மசாலாவை தூவின.

சரி உண்மையில் அந்த மூதாட்டி ஏன் அப்படி கூறினார் என அறிந்து கொள்ள அவரை தேடிக் கண்டுபிடித்து பேசிய போது, தான் வந்திருப்பது திமுக கட்சிக்காரர் என்று நினைத்து ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று கூறியதாகவும், ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக காரர் என்று தனக்கு தெரியாது என்றார். மேலும் வந்திருப்பர் முன்னாள் அமைச்சர் என்று என்னிடம் சிலர் கூறியதால், முன்னால் அமைச்சர் என்றால் திமுககாரர் என்று தான் நினைத்துவிட்டதாகவும் மற்றபடி எனக்கு பொன்.ராதாகிருஷ்ணனை வம்பிழுக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை என்று வெள்ளந்தியாக அந்த மூதாட்டி கூறியுள்ளார். வீடியோவை பார்க்கும் போதும் மூதாட்டி அதனை இயல்பாக கூறுவது நன்றாக தெரிகிறது.

click me!