அனைத்து ஊடகங்களையும் நடத்துவது நாடார், பிராமின் தான்! ஒரு சாதியையும் விட்டுவைக்காத கருணாஸ் !!

By sathish kFirst Published Sep 19, 2018, 9:55 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் உரிமையாளர்களும் நாடார்களாகவும், பிராமினாகவும் இருப்பதாக நடிகர் கருணாஸ் வயிற்று எரிச்சலுடன் பேசியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் உரிமையாளர்களும் நாடார்களாகவும், பிராமினாகவும் இருப்பதாக நடிகர் கருணாஸ் வயிற்று எரிச்சலுடன் பேசியுள்ளார்.  சென்னையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற தனது கட்சியின் ஆர்பாட்டத்தின் போது வன்னியர்கள், கவுண்டர்களை வம்பிழுத்த கருணாஸ் நாடார் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை.

   ஆர்பாட்டத்தின் போது பேசிய கருணாஸ், தன் பெயரில் நிறைய சொத்துகள் இருப்பதாக கூறினார். ஆனால் சொத்து சேர்ப்பதில் தான் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிவித்தார். சேர்க்கும் சொத்துகளை செலவு செய்வதில் தான் தனக்கு ஆர்வம் என்றும் அவர் கூறினார். தற்போது ஆர்பாட்டத்திற்கு கூட 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

   ஏன் இப்படி செலவு செய்கிறீர்கள் என்று பலரும் என்னை கேட்பார்கள், ஆனால் நான் அவர்களுக்கு எல்லாம் ஒன்றை தான் கூறிக் கொள்ளப்போகிறேன். நான் தற்போது எவ்வளவு பணம் சேர்த்தாலும், வீடு கட்டினாலும், நகை அணிந்தாலும் நான் செத்த பிறகு கருணாஸ் வைத்திருந்த வீடு, கருணாஸ் அணிந்துள்ள நகை என்று யாரும் செய்தி சொல்லப்போவதில்லை. அனைவருமே லொடுக்கு பாண்டியாக நடித்தார், திண்டுக்கல் சாரதியாக நடித்தார் என்று தான் செய்தி வெளியிடுவார்கள்.

   அதிலும் இப்போது இருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் இப்போது ஊடகங்கள் அனைத்தையும் நடத்துவது பிராமினும், நாடாரும் தான். எந்த ஊடகத்தை பாருங்கள் நாடார், நாடார் நாடார் தான். அவங்க செய்தில மட்டும் நாடார்னு போட்டுக்குவாங்க, நம்ம செய்தி போடச் சொன்னா போடமாட்டோம்னு சொல்லுவாங்க. ஆனால் நாடார்னு மட்டும் போட்டுக்குவாங்க. மானங்கெட்டவனங்க.

   என்று சரமாரியாக கருணாஸ் பேசியுள்ளார். ஏற்கனவே அந்த ஆர்பாட்டத்த்தில் பேசிய போது வன்னியர்களையும், கவுண்டர்களையும் வம்பிழுத்திருந்த கருணாஸ் நாடார்களையும் கடுமையாக பேசியிருப்பது மூன்று ஜாதியினரின் எதிர்ப்புக்கும் ஆளாகியுள்ளது.

click me!