#BREAKING அதிகரிக்கும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுக்கப்போகும் முதல்வர் ஸ்டாலின்?

Published : Jun 11, 2022, 09:48 AM ISTUpdated : Jun 11, 2022, 09:56 AM IST
#BREAKING அதிகரிக்கும் கொரோனா.. வேறு வழியில்லாமல் அதிரடி முடிவு எடுக்கப்போகும் முதல்வர் ஸ்டாலின்?

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததையடுத்து கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததையடுத்து கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவத்துறை ல்லுநர்கள்  மற்றும் உயரதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவத்துறை அமைச்சர் வெளியூரில் உள்ளதால் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?