ரஜினியும், பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும் - ஆடிட்டர் குருமூர்த்தி; அப்போ இன்னும் இணையலையா?

 
Published : Jan 15, 2018, 06:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
ரஜினியும், பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும் - ஆடிட்டர் குருமூர்த்தி; அப்போ இன்னும் இணையலையா?

சுருக்கம்

If Rajini and BJP joins Tamil Nadu will change - Auditor Gurmurthi

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என்று துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி தெரிவித்தார்..

சென்னை ஆழ்வார்பேட்டையில் துக்ளக் இதழின் 48-வது ஆண்டுவிழா நடைப்பெற்று வருகிறது. அந்த விழாவில் அதன் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்துகொண்டார்.

அதில் அவர் பேசியது, "ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும். தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது.

கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல் என்றும் கழக கட்சிகளைபோல் தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது என்றவர் கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது என்று கூறினார்.

தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் வளர வேண்டுமென்றால் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க கூடாது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தவறானது. அவரை போன்றவர்களுக்கு விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தக் கூடாது.

திமுக, அதிமுகவால் இளைஞர்களை ஈர்க்க முடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும். இலவசம் மற்றும் மானியங்களால்தான் தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்து நம்பிக்கையை அவமானம் செய்வது திராவிட டிஎன்ஏவில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆன்மிகத்தை மறக்கடித்து உள்ளனர். ஆன்மிகம் என்றால் என்ன? என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 12-ல் உச்ச நீதிமன்றத்தில் நடந்த சம்பவம், குழாயடி சண்டை போல் இருந்தது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிகிறது. தினகரன் வெற்றிப் பெற்றதற்கு திமுகதான் காரணம். திமுக விலை போகியுள்ளது" என்று அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!