எங்க கால் போடணுமோ அங்க போடுறது இல்ல.. எங்க தேவையில்லையோ அங்க போடுறது..! என்ன கொடுமடா இதெல்லாம்..?

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
எங்க கால் போடணுமோ அங்க போடுறது இல்ல.. எங்க தேவையில்லையோ அங்க போடுறது..! என்ன கொடுமடா இதெல்லாம்..?

சுருக்கம்

h raja continuously made mistakes in his tweets

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கொள்கை ரீதியாக முரண்படுபவர்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது சாடிவருகிறார். அவ்வாறு சாடும் அவர், பெரும்பாலும் குறில், நெடில் பிழைகளுடன் தான் டுவிட்டர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

மெர்சல் பட விவகாரத்தின்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தற்போது பராசக்தி திரைப்படம் வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்குப் பதிலளிக்கும் வகையில், டுவிட்டரில் பதிவிட்டிருந்த எச்.ராஜா, கோவில் என்பதற்குப் பதிலாக ”கேவில்” என எழுதியிருந்தார். 

அதேபோல, தற்போது கட்டாதே என்பதற்குப் பதிலாக காட்டாதே என எச்.ராஜா பதிவிட்டுள்ளார். மெர்சல் படத்தில் வசனத்தையும், விஜயின் தந்தை சந்திரசேகரின் கருத்தையும் விமர்சித்து இந்துக்களை விழித்துக்கொள்ள வலியுறுத்தும் விதமாக ஒரு டுவீட் போட்டுள்ளார். அதில், கோவில் கட்டாதே என குறிப்பிடுவதற்குப் பதிலாக கோவில் காட்டாதே என பதிவிட்டுள்ளார்.

குறில், நெடில் வித்தியாசத்தில் வாசகத்தின் ஒட்டுமொத்த அர்த்தமே கூட மாறிவிடும் என்பதை உணர்ந்து, இனிமேல் இந்துக்களுக்கு விடுக்கும் அறிவுரையோ அல்லது மாற்று சிந்தனையாளர்களின் மீதான விமர்சனமோ பிழையில்லாமல் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

தூக்கத்திலும் நடுக்கம்... படுக்கையிலும் குண்டு துளைக்காத ஜாக்கெட் அணியும் பாகிஸ்தான் அசிம் முனீர்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!