
சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் அதிமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள்.
அதன்படி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது.
அப்போது, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.
மாதந்தோறும் அதிமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருவது வழக்கம். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள்.
அதன்படி, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது.
அப்போது, எம்.ஜி.ஆர்.புகைப்படக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பல நலதிட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.
பின்னர், பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார்.