சுற்றுப்பயணம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விஷப் பரீட்சையில் இறங்காமல் இருப்பதே நல்லது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
சுற்றுப்பயணம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விஷப் பரீட்சையில் இறங்காமல் இருப்பதே நல்லது என்று ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து ஒபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருதரப்பும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே தொண்டர்களை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளனர். இதை அடுத்து இரு தரப்பிலும் தொண்டர்களை சந்திப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு
இதுவரை சேலம், திண்டுக்கல் என 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தினத்துக்கு பின் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தனது ஆதரவாளர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சுற்றுப்பயணத்தின்போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேலத்தை சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை.
இதையும் படிங்க: “மண்டைய உடைச்சிடுவேன்டா ராஸ்கல்..” செய்தியாளரிடம் வம்புக்கு போன சீமான் - வைரல் வீடியோ !
எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ், தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளது. அச்சத்தோடும், பயத்தோடும் கட்சித் தொண்டர்களின் முகத்தில் விழிப்பதற்கே பழனிசமி பயந்து நடுங்குகிறார். தொண்டர்கள் முதல் மக்கள் வரை தன் மீது கோபத்தில் உள்ளதை பழனிசாமி தரப்பு ஒப்புக்கொண்டதையே காட்டுகிறது. சுற்றுப்பயணம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி விஷப் பரீட்சையில் இறங்காமல் இருப்பதே நல்லது என்று தெரிவித்துள்ளார்.