
இன்று வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘ ஹெல்மெட் அணிவது மிகவும் அவசியமானது. 100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர். சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும். பட்டியலின பெண்ணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன். காட்பாடியில் எம்.ஜி.ஆருக்கு அதிமுகவை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது தவறு இல்லை. திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது’ என்று கூறினார்.
இதையும் படிங்க : Vijay : நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லணும் ! ஆதீன விவகாரத்தில் கருத்து சொன்ன அர்ஜுன் சம்பத்
இதையும் படிங்க : "ஆதீனத்தை தொட்டு பாருங்க.. திமுகவில் ஒருத்தர் கூட இருக்கமாட்டீங்க !" திமுகவுக்கு சவால் விடும் எச்.ராஜா !