தறிகெட்டு திரிந்த கல்லூரி மாணவன்...!! 10 ஆம் வகுப்பு மாணவியை அறையில் அடைத்து 6 நாள் அனுபவித்த கொடூரம்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 12, 2020, 4:53 PM IST
Highlights

பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஆறு நாட்களாக அறையில் வைத்து கதற கதற கற்பழித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர் . அம் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . 

பள்ளி மாணவியை கடத்திச் சென்று ஆறு நாட்களாக அறையில் வைத்து கதற கதற கற்பழித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது . அம் மாணவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . அதைத் தடுக்க போலீசாரும் அரசும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும் குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை . நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுகிறது . இந்நிலையில்  கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கல்லூரி படிக்கும் மாணவன் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செய்துள்ளனர்

கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது )  பள்ளிக்கு சென்ற இவரை கடந்த 6 நாட்களாக காணவில்லை .  இதில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மகள் மாயமானது குறித்து திருப்பானந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் . இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர் , இதில் மாணவிக்கு நெருக்கமானவர்களைப் பிடித்து விசாரித்ததில் உண்மை கசிய ஆரம்பித்தது .  அணைக்கரை பகுதி விநாயகர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாணவி அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது .  இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் .  மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படியுங்க:- ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடு..!! பாஜகவுக்கு முட்டுகொடுத்த அமைச்சர் கே. பாண்டியராஜன்...!!

 

பின்னர் தெடர்ந்து  மாணவியிடம் விசாரணை நடத்தியதில்,   கடந்த 6 நாட்களாக தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் மீது மாணவி புகார் கூறனார். பின்னர் அந்த மாணவனை பிடித்து விசாரித்ததில் கவிதா மீது தனக்கு ஏற்பட்ட மோகத்தால் ,  அவரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவர் ஒப்புக்கொண்டார்.  மாணவன் தெரிவித்த தகவல்  போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது .  இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர் சிறையில் அடைக்கப்பட்டார் .  மாணவனின் பெற்றோர்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!