எளியோரின் பசியாற்றும் ஈரோடு தம்பதியினர்… இதயத்தை நனைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் டிவீட்!!

Published : Aug 31, 2022, 06:50 PM IST
எளியோரின் பசியாற்றும் ஈரோடு தம்பதியினர்… இதயத்தை நனைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் டிவீட்!!

சுருக்கம்

எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே, வெங்கட்ராமன் – ராஜலட்சுமி என்ற தம்பதியினர் உணவகம் நடத்தி வருகின்றனர். அங்கு ஒரு ரூபாய்க்கு 3 வேளையும் உணவளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கனல் கண்ணா, நீ சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் தான் ... பெரியார் ரியல் ஸ்டண்ட் மாஸ்டர்.. மதுக்கூர் ராமலிங்கம்.

இதனால், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வரும் ஏழை, எளிய நோயாளிகள் தங்களது பசியை ஆற்றி கொள்கிறார்கள். இந்த நிலையில் வெங்கட்ராமன் – ராஜலட்சுமி தம்பதியினரின் இந்த செயல் தனது இதயத்தை நனைத்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஓவார் பேச்சு.. 8 வழி சாலையில் மாட்டிய எ.வ வேலு.. விழுந்தடித்து கொடுத்த விளக்கம்.

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்! என்று தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!