சட்டம் எல்லோருக்கும் ஒண்ணுதான்... சொல்லியும் கேட்காமல் பறந்த டிடிவி.தினகரன் மீது வழக்கு..!

Published : Apr 04, 2019, 10:20 AM IST
சட்டம் எல்லோருக்கும் ஒண்ணுதான்... சொல்லியும் கேட்காமல் பறந்த டிடிவி.தினகரன் மீது வழக்கு..!

சுருக்கம்

வாகன சோதனையின் போது காரை நிறுத்தாமல் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வாகன சோதனையின் போது காரை நிறுத்தாமல் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அரசியல் தலைவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.  

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து, சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ள மார்ச் 31-ம் தேதி மதியம், 3:00 மணிக்கு, அ.ம.மு.க., துணை பொதுச் செயலர், தினகரன், ஐந்துக்கும் மேற்பட்ட கார்களுடன் வந்தார். அப்போது சேலம் - அரூர் சாலை, ஆச்சாங்குட்டப்பட்டி சோதனைச்சாவடி அருகே, தேர்தல் நிலைக்குழு அதிகாரி மணிமேகலை தலைமையில் அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அவர்கள், தினகரன் மற்றும் அவரை பின்தொடர்ந்து வந்த 10 வாகனங்களில் தலைமையில் அணிவகுத்து வந்த கார்களை சோதனையிட வழிமறித்தனர். ஆனால், கார்களை நிறுத்தாமல் சென்று விட்டனர். இது குறித்து, மணிமேகலை புகாரின்பேரில் வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!