ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்க கூடாது தனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல் நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் அனுமதிக்கபாட்டார். அன்றைய தினத்தில் இருந்து சசிகலாவுக்கு எதிராக பல குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தார் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா.
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் தேர்வு செய்யபட்டார். ஆனால் சசிகலா முதலமைச்சர் பதவிக்கு வர முயன்றதால் ஓ.பி.எஸ் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் 45 நிமிடத்த்திற்கு மேலாக தியானத்தில் ஈடுபட்டார். பின்னர், கண்விழித்த ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
மேலும் என்னை மிரட்டித்தான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தனர் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.
அதேபோன்று தற்போது தனியாக பேரவையை தொடங்கிய தீபாவும் ஓ.பி.எஸ் போன்று மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 30 நிமிடத்திற்கு மேலாக ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார்.
மேலும் நாளை எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பட்டியல் வெளியிடப்படும் எனவும், நாளைமுதல் ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளர்.
இச்சம்பவம் தீபா ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.