
நாடாளுமன்ற தேர்தலில் 20 எம்.பி இடங்களை கைப்பற்றவில்லை என்றால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவதாக பெங்களூர் சிறையில் டி.டி.வி தினகரன் தனது சித்தி சசிகலாவிடம் சபதம் செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பெங்களூர் சென்ற தினகரன் அங்கு சசிகலாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். அதிலும் டி.டி.வி தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளால் சசிகலா அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அ.ம.மு.க என்ற பெயரில் தினகரன் கட்சி நடத்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்கிற ஒரு பெரிய குற்றச்சாட்டு உள்ளது.