ரூ. 20 கோடி மோசடி புகார் - தீபாவிடம் போலீசார் விசாரணை

 
Published : Apr 23, 2017, 09:30 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
ரூ. 20 கோடி மோசடி புகார் - தீபாவிடம் போலீசார் விசாரணை

சுருக்கம்

20 crore rupees fraud complaint about deepa by police investigate

பண மோசடி புகாரில் எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபாவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சில நாட்களுக்கு முன்பு பேரவை ஒன்றை தொடங்கினார். அதற்கு எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை என பெயர் சூட்டி கொடியையும் அறிமுகபடுத்தினார்.

இதற்கு உறுதுணையாக அவரது கணவர் மாதவனும் அவருடன் இருந்தார். ஆனால் பேரவையில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவின.

இந்நிலையில், தீபாவிற்கும் மாதவனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க நேசபாக்கத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தீபா 20 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சங்க அங்கீகாரம் ரத்தானதை மறைத்து தீபா பணம் வசூலித்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரின் பேரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!