கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்... மத்திய அரசு அறிவுறுத்தல்..!

Published : May 19, 2021, 05:25 PM ISTUpdated : May 20, 2021, 05:30 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்... மத்திய அரசு அறிவுறுத்தல்..!

சுருக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3 மாதங்களுக்குப் பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள், தொற்றி லிருந்து குணமடைந்து 3 மாதம் கழித்து 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பாக நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 14 நாட்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்