வீட்டு பூஜை அறையில் இப்படி செய்கிறீர்களா..? உங்கள் துன்பதிருக்கு இதுதான் காரணம்..!

 
Published : Jun 02, 2018, 02:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
வீட்டு பூஜை அறையில் இப்படி செய்கிறீர்களா..? உங்கள் துன்பதிருக்கு இதுதான் காரணம்..!

சுருக்கம்

we should not do this in poojai room

செய்யக்கூடாதவை......

நாம் தினமும் நம் வீட்டில் எப்படிஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்கிறோமோ அதனை பொருத்து தான் நம் வீட்டில் எந்த அளவிற்கு லட்சுமி கலாட்சம் உள்ளது என்பதை அனுபவபூர்வமாக தெரிந்துக் கொள்ள முடியும்.

எதனை எல்லாம்  நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும் தெரியுமா...?

காலை அல்லது மாலையில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றக்கூடாது.

சாமி படங்களுடன், நமது முன்னோரின் படங்களையும் சேர்த்து வைக்கக் கூடாது.

வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் தலைக்கு நேராக வைத்து தேங்காய் உடைக்கக் கூடாது.

பூஜையின்போது, விபூதியை நீரில் குழைத்து பூசக்கூடாது.

துண்டைக் கட்டிக்கொண்டோ, துண்டை தோளில் போட்டுக்கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக்கூடாது.

விளக்கேற்றி வழிபடும்போது, விளக்கில் இருந்து திரி எரியக்கூடாது.

தேங்காயை 2க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை சாமிக்கு வைக்கக்கூடாது.

இயற்கைப் பூக்களுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது.

குடும்பத்தினர் வெளியே கிளம்பிச் சென்றதும், வீட்டில் பூஜை தொடர்பான எந்த வேலையையும் செய்ய வேண்டாம்.

வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு தானம் தருமம் செய்வது அவ்வளவு சிறப்பல்ல.

நிவேதனம் செய்த தேங்காயைச் சமையலில் சேர்த்து, அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

பூஜை அறையில், அல்லது சாமி படங்களில் காய்ந்த பூக்களை வைத்திருக்கக்கூடாது

இவை  அனைத்தையும்  நாம்  பின்பற்றி வந்தால், நம் வாழ்வில் எந்த துன்பமும்  இல்லாமல் வாழலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்