Sani Peyarchi 2022: சனியுடன் கூட்டு சேர்ந்த செவ்வாய்...இந்த ராசிகளுக்கு ராஜயோகம்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

Anija Kannan   | Asianet News
Published : May 14, 2022, 05:03 AM IST
Sani Peyarchi 2022: சனியுடன் கூட்டு சேர்ந்த செவ்வாய்...இந்த ராசிகளுக்கு ராஜயோகம்...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்

சுருக்கம்

Sevvai Sani Peyarchi 2022 Palangal: சனியும் செவ்வாயும் கும்ப ராசியில் பிரவேசம் அடைந்துள்ளனர். இவை, எந்தெந்த ராசிக்காரர்களுக்குச் சிறப்பு பலன்களை தரப்போகுது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் சேர்க்கை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் சனியும் செவ்வாயும் கும்ப ராசியில் பிரவேசம் அடைந்துள்ளனர். இந்த கூட்டணியால், எந்தெந்த ராசிக்காரர்களுக்குச் சிறப்பு பலன்களை அளிக்கிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்: 

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இந்த நாள்அதிர்ஷ்டம் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரிகள் இடையே முன்னேற்றம் அவசியம். குடும்பத்தில் அமைதி நிலவும். பணியிடத்தில் மரியாதை கூடும், வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும்.

ரிஷபம்: 

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இந்த நாள் அமோகமான நாளாக இருக்கும். மனதில் இனம் புரியா மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். எதிலும் விடாமுயற்சி இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுமை தேவை 

மிதுனம்: 

மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சனி மற்றும் செவ்வாய் கூட்டணி நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

கடகம்: 

கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால், உங்களது கடமையில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருங்கள்.  தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் அக்கறை அவசியம்.

சிம்மம்: 

சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதக பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். 

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் இந்த நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.  ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியமாகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். 

துலாம்: 

துலாத்தில் பிறந்தவர்களுக்கு  சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் இந்த நாள் சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் எச்சரிக்கை அவசியம். .   கணவன் மனைவி இடையே பேச்சு வார்த்தையில் இனிமை அவசியம். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது உத்தமம். பெண்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சனி மற்றும் செவ்வாய் கூட்டணி இதுவரை இழுபறியில் இருந்து வந்த வேலைகள் முடிவடையும். தடைப்பட்ட சுப காரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவி இடையே நெருக்கும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கூடும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். 

தனுசு: 

தனுசில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள்சாதக பலன்களை தரும். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். திடீர் பண வரவு உண்டாகும். 

மகரம்: 

மகரத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் இந்த நாள் நீண்ட நாள் நினைத்த திட்டம் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அதிக கவனம் தேவை. மற்றவர்களிடம் பேசும் போது அதிக கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். 

கும்பம்: 

கும்பத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் இந்த நாள் உற்சாகமாக இருக்கும்.  சுபகாரியத் தடைகள் விலகி குடும்பத்தில் நன்மைகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கும்.

மீனம்: 

மீனத்தில் பிறந்தவர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கூட்டணியால் உங்களுடைய நடவடிக்கைகளில் புதிய மாற்றங்கள்இருக்கும். தேவையற்ற மன குழப்பங்கள் நீங்கும். இறை வழிபாடுகளில் மீது கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கணவன் மனைவி உறவு வலுப்பெறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு  வெற்றி நிச்சயம்.

மேலும் படிக்க...குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்