தமிழகத்தில் இந்த இடங்களில் மட்டும் செம மழையாம் இப்போ..!

Published : Apr 09, 2019, 03:10 PM IST
தமிழகத்தில் இந்த இடங்களில் மட்டும் செம மழையாம் இப்போ..!

சுருக்கம்

கோடை காலம் தொடங்கி சுட்டெரித்து வரும் வயலுக்கு நடுவே தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.

கோடை காலம் தொடங்கி சுட்டெரித்து வரும் வயலுக்கு நடுவே தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது.

நேற்றுமுன்தினம் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்துவரும் இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று முன் தினம் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு நீலகிரியில் மழை பெய்து உள்ளது. இன்று திண்டுக்கல் கொடைக்கானல் நகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடனும் சில நேரங்களில் லேசான வெயிலும் காணப்படுகிறது

ஆனாலும் இந்த ஆண்டு இயல்பைவிட மூன்று முதல் ஐந்து டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்