Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!

Published : Jun 15, 2024, 11:25 AM IST
Ragi Idli : ராகி இட்லியில் அப்படி என்னதான் சத்து இருக்கு; செஞ்சு சாப்பிட்டு பாருங்க அசந்துருவீங்க!!

சுருக்கம்

ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்க நன்மைகளை வழங்கும் கேழ்வரகு இட்லி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக பெரும்பாலும் ஒரு வீட்டில் காலை உணவாக இட்லி தோசை தான் இருக்கும். அந்த வகையில், இன்று உங்களது வீட்டில் காலை உணவாக இட்லி செய்யப் போறீங்களா? அதுவும் எப்பவும் சாப்பிடுகிற அரிசி மாவு இட்லி தான் செய்யப் போறீங்களா? நீங்கள் வழக்கமாக சாப்பிடும் இட்லிக்கு பதிலாக ஒரு முறை கேழ்வரகில் (ராகி) இட்லி செய்து சாப்பிடுங்கள். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. 

ஆம், இந்தக் கேழ்வரகில் எக்கச்சக்க நன்மைகள் நிறைந்துள்ளன. அதாவது, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம் பற்களில் கூச்சம் என பல பாதிப்புகள் உருவாகும். அதுவும் குறிப்பாக, ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் கால்சியம் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, கால்சியம் குறைபாட்டை நீக்கக்கூடிய அற்புதமான சக்தி இந்த கேழ்வரகிற்கு உண்டு. 

அதுமட்டுமின்றி, சர்க்கரை நோயாளிகளுக்கும் கேழ்வரகு ரொம்பவே நல்லது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் கேழ்வரகு நல்லது. எனவே, இந்தக் கேழ்வரகில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விதவிதமான ரெசிபி செய்து கொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, வாங்க.. இப்போது நாம் இந்த பதிவில் கேழ்வரகு இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகளே! ஆரோக்கியமான காலை டிபனுக்கு இப்படி இட்லி செய்து சாப்பிடுங்க!

கேழ்வரகு இட்லி செய்ய தேவையான பொருட்கள்: 
கேழ்வரகு - 1 கப்
வெந்தயம் - 1 ஸ்பூன்
இட்லி அரிசி - 1/2 கப்
உளுந்து - 1/2 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப

இதையும் படிங்க:  இன்று காலை டிபனாக 'இளநீர் இட்லி' ட்ரை பண்ணுங்க.. ரெசிபி இதோ!

செய்முறை:

  • கேழ்வரகு இட்லி செய்ய கேழ்வரகை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அதனுடன் எடுத்து வைத்த இட்லி அரிசி, உளுந்து வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தண்ணீரில் கழுவவும். பிறகு, சுத்தமான தண்ணீரை அதில் ஊற்றி சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஐந்து மணி நேரம் கழித்து அவற்றை மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்  பிறகு அவற்றை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு முறை கலக்கவும். பிறகு அந்த மாவை குறைந்தது 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • மாவு நன்கு புளித்ததும் அதை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும். ஆனால், ஒரு கண்டிஷன், இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் சுமார் 15 முதல் 20 நிமிடம் வரை நன்கு வேக வைத்து எடுத்தால், ராகி இட்லி ரெடி. இந்த ராகி இட்லியுடன் நீங்கள் காரமான சட்னி சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். நீங்கள் விரும்பினால், இந்த மாவுடன் தண்ணீர் சேர்த்து மொறு மொறு தோசையும் சுட்டும் சாப்பிடலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Tulsi Planter Designs: வீட்டுக்கு அழகு சேர்க்கும் துளசி மாடம்... இந்த 4 டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்!
Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!