Latest Videos

பாய் வீட்டு மட்டன் பிரியாணி ஒருமுறை இப்படி செய்ங்க.. திரும்பத் திரும்ப சாப்பிடுவீங்க!

By Kalai SelviFirst Published Jun 15, 2024, 2:38 PM IST
Highlights

இந்த பதிவில் வீட்டிலேயே பாய் வீட்டு மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

அசைவ பிரியர்கள் அனைவரும் ரொம்பவே, விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று பிரியாணி. நீங்கள் பிரியாணி பிரியராக இருந்தால் கண்டிப்பாக அடிக்கடி பிரியாணி சாப்பிடுவீர்கள். அப்படி, நீங்கள் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பிரியாணி செய்து சாப்பிடுகிறீர்களா..?

அப்படியானால் அடுத்த முறை பிரியாணி செய்வதாக இருந்தால் பாய் வீட்டு மட்டன் பிரியாணியை செய்யுங்கள். இந்த மட்டன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும், இது அனைவரும் விரும்பி சாப்பிடிய கூடியதாகவும் இருக்கும். வாங்க இப்போது இந்த பதிவில் வீட்டிலேயே பாய் வீட்டு மட்டன் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  Fish Biryani: சுவையான ருசியில் அருமையான மீன் பிரியாணி; ரெசிபி இதோ!

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: 
பாஸ்மதி அரிசி - 1/4 கிலோ
மட்டன் - 1 கிலோ 
வெங்காயம் - 400 கி (நறுக்கியது)
தக்காளி - 400 கி (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
பட்டை - 3
கிராம்பு - 5
ஏலக்காய் - 3
அண்ணாச்சி பூ - 2
பிரியாணி இலை - 3
எலுமிச்சை - 1
நெய் -100 கி
தயிர் - 1/2 லி
பச்சை மிளகாய் - 15 
உப்பு - சுவைக்கு ஏற்ப
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு 
எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

செய்முறை:

  • பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் எடுத்து வைத்த பட்டை, ஏலக்காய், கிராம்பு, அண்ணாச்சி பூ மற்றும் பிரியாணியிலே ஆகியவற்றை சேர்க்கவும்.
  • இப்போது அதில் நீள்வாக்கில் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் நன்கு வந்ததும் இதனுடன் எடுத்து வைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடுங்கள். 
  • இப்போது கழுவி வைத்தால் மட்டனை இதனுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்த தக்காளி மற்றும் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கிளறி விடுங்கள்.
  • பிறகு இதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். இப்போது எடுத்து வைத்த தயிரை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து மசாலா வாசனையுடன் கொதித்து வரும்போது எடுத்து வைத்துள்ள அரிசியை அதில் சேர்க்கவும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும். 
  • இப்போது இந்த பாத்திரத்தை மூடி வைத்து அதன் மேல் தீக்கனல்களை போட்டு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடு இறக்கினால், சுவையான பாய் விட்டு மட்டன் பிரியாணி ரெடி. இதனுடன் வெங்காய ரைத்தா, சிக்கன் கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!