Maha Shivaratri mantra: சிவசிவ என்றிட தீவினை தீருமாம்...மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரங்கள்!

Anija Kannan   | Asianet News
Published : Mar 01, 2022, 11:22 AM ISTUpdated : Mar 01, 2022, 11:26 AM IST
Maha Shivaratri mantra: சிவசிவ என்றிட தீவினை தீருமாம்...மகா சிவராத்திரியில் உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரங்கள்!

சுருக்கம்

Maha Shivaratri mantra: மகாசிவராத்திரி நாளான இன்று சிவனின் அருளை முமுமையாக பெற இரவு முதல் காலை வரை உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

மார்ச் 1ஆம் தேதி (01.03.2022) இன்று மகாசிவராத்திரி நாளாகும்.இந்நாளில், சிவ பக்தர்கள் அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.

மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருகிறார். மகாசிவராத்திரி நாளான இன்று சிவனின் அருளை முமுமையாக பெற இரவு முதல் காலை வரை உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.அப்படி உச்சரித்தால், சிவபெருமான் சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் என புராணங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க...Shivaratri Palan: சிவராத்திரி நாளில் இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பார்ட்! இன்றைய 12 ராசிகளின் பலன்கள்!

ஓம் நம சிவாய: 

ஓம் நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் உச்சரிப்பதால் நம் மனதிலிருந்து பயம் நீங்கும். நமக்குள் ஒரு நேர்மறையான அதிர்வை உருவாக்குகிறது.

ஓம் நமோ பகவதே ருத்ராய
ருத்திரன் மற்றும் சிவபெருமானிடம் ஆசி பெறுவதற்காக இந்த மந்திரம் உச்சரிக்கப்படுகிறது.

ஸ்ரீ ருத்ரர் காயத்ரி மந்திரம்:

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்
ஒருவருக்கு வேலை அல்லது எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கவனம் மற்றும் சிரத்தை அதிகரிக்கும்.

தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகம்

கற்பூர கௌரம் கருணாவதாரம் என்பது தொன்மையான சமஸ்கிருத ஸ்லோகமாகும். இது சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறித்து பாடப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் யஜுர் வேதத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.

கற்பூர கௌரம் கருணாவதாரம்
கற்பூரகௌரம் கருணாவதாரம்
சம்சாரசாரம் புஜகேந்திரஹாரம்
சதாவசந்தம் இருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி

இந்த சிவ மந்திரம் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்புக்காக உச்சரிக்கப்படுகிறது.

ஓம் சர்வ மங்கள்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே !
சரண்யே திரியம்பிகே கௌரி நாராயணீ நமோஸ்துதே !!

இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால், நம் ஆன்மாவை தெளிவுபடுத்தும். எனவே, மேற் சொன்ன மந்திரங்களை உச்சரித்து இனி வரும் நாட்களில் உங்கள் வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெற வாழ்த்துக்கள்!!

மேலும் படிக்க...Maha Shivaratri Pooja: மகாசிவராத்திரி நாளில்...பூஜை செய்து சிவனின் அளவற்ற அருளை பெறுவது எப்படி?

மேலும் படிக்க...Maha Shivaratri Fasting: மகாசிவராத்திரி விரதமுறைகள் தெரியுமா...? விரதமிருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை.?

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!