Horoscope: செவ்வாயின் ராசி மாற்றத்தால்...மகிழ்ச்சி கடலில் நீந்த போகும் 3 ராசிகள்...இன்றைய ராசி பலன்..!

By Anu KanFirst Published Apr 7, 2022, 6:00 AM IST
Highlights

Horoscope: ஜோதிடத்தின் படி, கிரகங்களில் ராசி மாற்றம் என்பது அனைத்து ராசிகளிலும், பாதிப்பை உண்டு பண்ணும். சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ஆனால், சிலர் இதனால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

ஜோதிடத்தின் படி, கிரகங்களில் ராசி மாற்றம் என்பது அனைத்து ராசிகளிலும், பாதிப்பை உண்டு பண்ணும். சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். ஆனால், சிலர் இதனால் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

கிரகங்களின் அதிபதியான செவ்வாய் ஏப்ரல் 7ஆம் தேதி சனியில் வீவீடான கும்ப ராசியில் பிரவேசிக்க உள்ளார். செவ்வாய் கிரகத்தின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். செவ்வாய் இந்த பெயர்ச்சியால் மகிழ்ச்சி அடையப்போகும் 3 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

மேஷம்:

செவ்வாய் மேஷத்தின் 11 ஆம் வீட்டில் பிரவேசிக்கிறார்.இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் பெறலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு இந்த நேரம் சாதகமானது. இருப்பினும், செவ்வாய் சஞ்சாரத்தால் மன உளைச்சல் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைப் பற்றி கவலை ஏற்படலாம். 

ரிஷபம்:

செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பெயர்ச்சியாவார். இந்த காலத்தில், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் பணி செய்யும் திறன் மேம்படும்.  திருமண யோகம் கிடைக்கும்.

கன்னி: 

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சாதகமாக இருக்காது. இந்த காலத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பயணத்தின் முழு காலத்திலும் ஒருவர் ஒருவித மன உளைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த சமயம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

click me!