Today astrology: சிவனின் அருளால் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி இன்று முதல் தலைகீழாக மாறும்! இன்றைய ராசி பலன்!

By Anu KanFirst Published Mar 2, 2022, 6:13 AM IST
Highlights

Today astrology: உலகம் முழுவதும் உள்ள சிவபக்தர்களால், நேற்று துவங்கி இன்று முதல் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பம்சம் வாய்ந்த நாளில், மகர ராசியில் ஐந்து கிரகங்களின் சுப சேர்க்கை உருவாகிறது. 

உலகம் முழுவதும் உள்ள சிவபக்தர்களால், நேற்று துவங்கி இன்று முதல் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பம்சம் வாய்ந்த நாளில், மகர ராசியில் ஐந்து கிரகங்களின் சுப சேர்க்கை உருவாகிறது. 

ஜோதிட நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மார்ச் 2 ம் நாள், மகாசிவராத்திரி இன் பெரிய பண்டிகையிலிருந்து, சிவனின் அருள் கிடைக்கும் நாளாக துவங்குகிறது. இதனுடன், மார்ச் 2022 இன் இரண்டாம் நாளில், இருந்து பல மங்களகரமான யோகங்கள் மற்றும் அரிய பஞ்ச கிரகங்களும் உருவாகின்றன.

Latest Videos

மிகவும் நல்ல தற்செயலில் தொடங்கும் இந்த நாள் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். மகர ராசியில் 5 கிரகங்களின் சேர்க்கை 5 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பணத்தையும், வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும். மொத்தத்தில் மார்ச் மாதம் இவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சிறப்பாக இருக்கும்:

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழிலில் அளப்பரிய பலன்களைத் தரும். குறிப்பாக வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு-அதிகரிப்பு கிடைக்க வலுவான வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தொழிலில் பெரிய சாதனைகளை படைக்கலாம். பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பண வரவு சாதகமாக இருக்கும். நீண்ட பிரயாணம் இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பொருள் வசதிகள் அதிகரிக்கும். பணம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். தடைப்பட்ட பணம் வருவதற்கான முழு வாய்ப்புகள் உள்ளன. இதுவரை முடங்கிக் கிடந்த பணிகளும் தொடங்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முழுவதும் பல நன்மைகளைத் தரும். வெற்றிகள் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு பணியையும் எளிதாக முடிப்பீர்கள். 

கும்பம்: 

கும்ப ராசியினருக்கு மார்ச் மாதம் முழுவதும் ஐஸ்வர்யம் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் புதிய உறவுகள் உருவாகும். தொழில் வளர்ச்சி அடையலாம். புதிய வேலை கிடைக்கலாம். நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும்.

மேலும் படிக்க...Lord shiva weapon: சிவபெருமானின் காக்கும் ஆயுதங்கள்..அழிக்கும் ஆயுதங்கள்..! சிறப்பான ஆயுதங்கள் என்ன..?

click me!