குழந்தை பிறந்த பிறகும் இந்த தவறை செய்யாதீங்க.. இல்லனா விவாகரத்து கன்பார்ம்!

By Asianet TamilFirst Published Feb 27, 2024, 9:20 PM IST
Highlights

குழந்தை பிறந்த பிறகும், உங்கள் குடும்பம் மகிழ்ச்சிக் கடலாக இருக்க இந்த விஷயங்களை பின்பற்றுங்கள்..

காலத்துக்கு ஏற்ப மனிதன் மாறுகிறான் என்பது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் சூழ்நிலைகள் ஒரு நபரை மாற்றுகின்றன என்பது தான் உண்மை. அந்தவகையில், இன்று பல தம்பதிகள் குழந்தை பெற்று பிரிந்து வாழ்கின்றனர். முந்தைய அழகான ரசமான தருணங்கள் கண் முன்னே வந்தாலும் வாழ்க்கை வேறு திருப்பத்தை எடுக்கும். எவ்வளவோ முயன்றும் முன்போல் இருக்க முடியவில்லையே என்ற குழப்பம் இருவருக்குள்ளும் இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் இருவரின் உறவும் பாதிக்கப்படுவது உறுதி. இதற்கான காரணங்கள் என்னவென்று இப்போது நாம் பார்ப்போம்.

ஒருவருக்கொருவர் நேரம் கொடுப்பதில் தவறியது!
குழந்தை பிறந்த முதல் இரண்டு வருடங்கள் எல்லா தம்பதிகளுக்கும் மிகவும் பிஸியாக இருக்கும். இருவரும் குழந்தையைப் பராமரிப்பதில் தங்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். தங்களுக்காக அல்லது தங்கள் துணைக்காக நேரம் ஒதுக்க முடியாது. சாப்பாடு, கண் பார்த்து பேசுவது, குளியல் கூட சரியான நேரத்தில் நடக்காது. ஆனால் எக்காரணம் கொண்டும் உங்கள் வாழ்க்கையை இந்த திசையில் திருப்ப வேண்டாம். முடிந்தவரை உங்கள் துணையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் குழந்தையுடன் கூட அவர்களுக்கு வேலைகளில் உதவுங்கள். இதனால் இருவரும் ஒன்றாக இருப்பது சாத்தியமாகிறது.

தேவையில்லாத விவாதம்:
நீங்களும் உங்கள் துணையும் வெவ்வேறு விஷயத்தில் வேறுபட்டிருக்கலாம்.உங்கள் தாய் உங்களை எப்படி வளர்த்தார்களோ அப்படியே உங்கள் குழந்தையை வளர்க்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால், உங்கள் துணை அதை விரும்பாமல் இருக்கலாம். ஆனா இதுக்கு ரெண்டு பேரும் உட்கார்ந்து சண்டை போடுறது சரியல்ல. குழந்தை ஆதரவு விஷயத்தில் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுசரித்து செல்ல வேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

நிதி முடிவு:
குழந்தை பிறப்பதற்கு முன், நீங்களும் உங்கள் துணையும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம். ஆனால் குழந்தை பிறந்த பிறகு உங்கள் செலவுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.
குழந்தை பிறந்த பிறகு முன்பு போல் எல்லாவற்றுக்கும் பணம் செலவழிக்க முடியாது. எனவே நீங்கள் இருவரும் உட்கார்ந்து அதைப் பற்றி பேசுங்கள், எதில் பணத்தை முதலீடு செய்வது, எதில் முதலீடு செய்யக்கூடாது என்று முடிவு செய்யுங்கள்.

எதற்கெடுத்தாலும் சந்தேகம்:
முதலில், நீங்களும் உங்கள் துணையும் இருவர் மட்டுமே, எனவே நீங்கள் ஒருவரையொருவர் நம்பி வசதியாக வாழ்ந்தீர்கள். உங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு, நீங்கள் இருவரும் பெற்றோராகிவிட்டதால் உங்கள் சொந்த பொறுப்புகள் உள்ளன. எனவே, பெற்றோராகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் உங்கள் பொறுப்பை மறந்து எல்லாவற்றையும் சந்தேகிக்கக்கூடாது.

ஆடம்பரத்தை தவிர்க்கவும்!
ஒருவரையொருவர் அனுசரித்து வாழ்க்கையை வாழப் பழகிக் கொள்ளுங்கள். இந்த ஆரம்ப நாட்களில் முடிந்தவரை குழந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள், ஏனெனில் குழந்தைக்கு அம்மா மற்றும் அப்பாவின் அன்பான அரவணைப்பு தேவை. இந்த விஷயத்தில், நீங்கள் இருவரும் பணத்தை சரியாக விவாதித்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். எல்லோரையும் போல நாமும் ராஜரீகமாக வாழ வேண்டும் என்ற மனநிலையில் இருந்து விலகி இருந்தால் நல்லது.

click me!