தமிழகத்தில் "இந்த இடங்களில்" மட்டும் இன்று பேய் மழை பெய்ய போகிறதாம்..!

Published : May 07, 2019, 03:24 PM IST
தமிழகத்தில் "இந்த இடங்களில்" மட்டும் இன்று பேய் மழை பெய்ய  போகிறதாம்..!

சுருக்கம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் "இந்த இடங்களில்" மட்டும் இன்று பேய் மழை பெய்ய போகிறதாம்..! 

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி எங்கெல்லாம் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,மற்ற ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தருமபுரி, வேலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அதிக வெப்ப காற்று உணரமுடியும் என்றும் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள நாம் எங்கு பயணித்தாலும் நம்முடன் ஒரு வாட்டர் பாட்டில், குடை என அனைத்தையும் வைத்துக் கொள்வது நல்லது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் பப்பாளி சாப்பிடலாமா? 'இத' அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இரவில் சப்பாத்தி சாப்பிட்டால் 'இத்தனை' நன்மைகளா?