புதுசா வீடு வாங்கப் போறீங்களா ? இன்னும் ஒரு மாசம் பொறுங்க !! ஏன் தெரியுமா ?

Published : Feb 25, 2019, 08:20 AM ISTUpdated : Feb 25, 2019, 08:21 AM IST
புதுசா வீடு வாங்கப் போறீங்களா ? இன்னும் ஒரு மாசம் பொறுங்க !! ஏன் தெரியுமா ?

சுருக்கம்

புதிய வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்தது 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதால், புதிய வீடு வாங்குபவர்கள் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருந்தால் குறைந்த விலைக்கு வீடு கிடைக்க வாய்ப்புள்ளது.

கட்டி முடிக்கப்படாத வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான ஜி.எஸ்.டி.யை ஒரு சதவீதமாகவும் குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

ஜிஎஸ்டி விகிதங்களை அவ்வப்போது மாற்றி அமைப்பது பற்றி ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் செயல்பட்டு வருகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், ரியல் எஸ்டேட் துறைக்கும், வீடு வாங்குவோருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் உள்ள வீடுகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுபோல், குறைந்த விலை வீடுகளுக்கான ஜிஎஸ்டி 8 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்படுகிறது.. இந்த வரி குறைப்பு, ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

மேலும், குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை, ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீடுகளே ‘குறைந்த விலை வீடுகள்’ என்று கருதப்பட்டது. இனிமேல், மெட்ரோ நகரங்களிலும், பிற நகரங்களிலும் ரூ.45 லட்சம் வரையுள்ள வீடுகள் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

அதே சமயத்தில், மெட்ரோ நகரங்களாக இருந்தால் 60 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும், பிற நகரங்களாக இருந்தால் 90 சதுர மீட்டர் பரப்பளவு வரை கொண்ட வீடுகளும் குறைந்த விலை வீடுகளாக கருதப்படும்.

சென்னை, பெங்களூரு, டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம், ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகியவை மெட்ரோ நகரங்கள் ஆகும்.

இந்த முடிவு, கட்டுமான துறைக்கு ஊக்கம் அளிக்கும். குறைந்த விலை வீடுகளுக்கான விலை வரம்பு உயர்த்தப்பட்டு இருப்பதால், வீடு வாங்குவோர் இன்னும் தரமான வீடுகளை வாங்க முடியும் என தெரிகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!