
தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு..! பொதுமக்கள் திணறல்..!
வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. கடந்த இரண்டு மாத காலத்தில் குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்த உடன் 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
பின்னர் மீண்டும் படிப்படியாக குறைந்து சவரன் விலை 28 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. இந்த நிலையில் மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. தீபாவளிக்கு நெருங்க உள்ள தருணத்தில் நாளுக்கு நாள் சவரன் விலை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர் அதன்படி இன்றும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தும், சவரன் ரூ.29 ஆயிரத்து 264 ரூபாய்க்கு விற்கபடுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
ஒரு கிராம் வெள்ளி 49.10 ரூபாய்க்கு விறக்கப்டுகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.