தமிழகத்தில் கனமழை...! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ..!

Published : Oct 05, 2019, 08:27 PM IST
தமிழகத்தில் கனமழை...!  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ..!

சுருக்கம்

கடந்த 24 மணி நேரத்தில், சங்க கிரியில் 8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரியில் 7 செ.மீட்டரும், ஆம்பூர், நாமக்கலில் 5 செ.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. 

தமிழகத்தில் கனமழை...!  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ..! 

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், சங்க கிரியில் 8 செ.மீட்டரும், கிருஷ்ணகிரியில் 7 செ.மீட்டரும், ஆம்பூர், நாமக்கலில் 5 செ.மீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது. 

இதே போன்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பிற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மழை வரும் 9 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும், சென்னை நகரை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்