தங்கம் விலை அநியாயத்திற்கு உயர்வு..! மக்கள் தவியோ தவிப்பு ..

Published : Jun 25, 2019, 05:51 PM ISTUpdated : Jun 25, 2019, 06:03 PM IST
தங்கம் விலை அநியாயத்திற்கு உயர்வு..! மக்கள் தவியோ தவிப்பு ..

சுருக்கம்

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. 

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரன் 26 ஆயிரம் ரூபாயை கடந்தது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கடும் உயர்வு கண்டு வருவதால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி மீண்டும் உயர்வை கண்டு உள்ளது.

அதன் படி, காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 43 ரூபாய் உயர்ந்து 3,308 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 464 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது மாலை நேர நிலவரப்படி, கிராமிற்கு ரூ.5 குறைந்து 3303 ரூபாயாக உள்ளது. 

கடந்த 5 ஆண்டுகளில், இல்லாத அளவிற்கு சென்ற வாரம் ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1000 அதிகரித்து, சவரன் ரூபாய் 26 ஆயிரம் கடந்து இருந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இன்றும் தங்கம் விலை அதிகரித்து சவரன் 27 ஆயிரம் ரூபாய் தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  
வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி கிராம் 10 காசுகள் குறைந்து 41.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்