ஆர்வகோளாரில் விண்கல் என நினைத்து காய்ந்த மனித கழிவை குளிர்சாதனபெட்டியில் பாதுகாத்து வந்த காமெடி..!

First Published Jan 24, 2018, 10:14 AM IST
Highlights
due to misperception people kept the dry toilet in the fridge


மனித கழிவை விண்கல் என எண்ணி குளிர்சாதன பெட்டியில் வைத்து அழகு பார்த்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள  குருகிராம் அடுத்த பாசில்பூர்  பாடிலி  கிராமத்தில் வானத்திலிருந்து  8 கிலோ எடை கொண்ட பொருள் ஒன்று அங்குள்ள வயல் வெளியில் விழுந்துள்ளது. வேகமாக விழுந்த அழுத்தத்தில், , விழுந்த இடத்தில் ஒரு அடி பள்ளம்  கூட ஏற்பட்டு உள்ளது

இதனை அறிந்த கிராம மக்கள் ஏதோ அதிசய கல் விழுந்துள்ளது என நினைத்து  ஆர்வகோளாரில் தங்கள்  வீட்டிற்கே கொண்டு வந்து  குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த தகவல்  தீயா பரவ,வானிலை ஆய்வு மைய  அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் அதன் மாதிரிகளை  சேகரித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  தான் தெரியவந்தது வானிலிருந்து விழுந்தது விண்கல் அல்ல....காய்ந்த நிலையில் இருந்த மனித கழிவு விமானத்தில் இருந்து விழுந்துள்ளது  என்று..

பின்னர் சொல்லவா வேண்டும்...உண்மையை அறிந்த கிராம மக்கள்  ஓடி சென்று தங்கள் வீட்டு குளிர்சாதனபெட்டியில் வைத்திருந்த விண்கல்(மனித கழிவு) தூக்கி எறிந்தனர் .

இந்த சம்பவம் அறிந்த மற்றவர்கள் ஒருவரை  ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

click me!