செல்வம் பெருக அமாவாசை அன்று இதை செய்யாதீங்க...!

First Published Feb 16, 2018, 5:44 PM IST
Highlights
dont do this on amavasai


அம்மாவாசை இருள் சூழ்ந்த  நாள் என்று சொல்லலாம்...இது மிக உன்னதமான நாள்..முன்னோர்கள் பெரியோர்கள் அம்மன் வழிபாட்டை செய்வதற்கு மிக உகந்த நாள்...

செய்ய கூடாதவை

தொழில் சம்மந்தப்பட்டது செய்ய  கூடாது...காரணம்  காற்றிலிருந்து, கடல் வரை  ஒரு மாற்றம் இருக்கும்...

இந்த நாட்களில் எதாவது  முழக்கிய வேலையை செய்தால் அது சரியாக வருமா என்றால் சந்தேகமே ...

காரணம்

கடல் அலை முதல் காற்று வரை அனைத்திலும் சிறிய மாற்றம் இருக்கும் அல்லவா..? உதாரணம் : கடல் அலை அதிகமாக இருக்கும்

இப்படி இயற்கையிலேயே மாற்றம்  ஏற்படும்  போது,மனிதர்களுக்கு மாற்றம் ஏற்படாமல் இருக்குமா..?

மனம்  படபடப்பு ஏற்படும்

மனிதர்களுக்கு  அமாவாசை அன்று படபடப்பு ஏற்படும். ஒரு படப்படப்போடு வேலை  செய்யும் போது அது தவறாக மாறிவிடும்.

அடுத்ததாக,சற்று சிரமமான வேலைகளை செய்து, அன்றைய தினம் நம்கையில்  எதாவது அடிப்பட்டால் விரைவில் சரியாகாது

 இன்றைய  தினத்தில்  தேவை இல்லாத முடிவு எடுப்பது  நல்லது இல்லை.மேலும்,   அம்மாவாசை அன்று வாசலில் கோலம் போடாதீர்கள்

 காரணம்

கோலம் போட்டால், இறந்தவர்களை வீட்டிற்கு அழைப்பது போன்றது...சரி  நம் குடும்ப உறுப்பினர்கள் தானே வந்தால் என்ன வென்று கேட்டால்,இறந்தவர்கள் என்பதால் அது   'நெகடிவ் வைப்ரேஷனை' ஏற்படுத்தும் என  கருட புராணத்தை பொறுத்தவரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தெய்வ வழிபாடு முக்கியம்

தெய்வ வழிபாடு மிக முக்கியம்,அதிலும் மவுன விரதம் இருப்பது ஆக சிறந்தது.... தானம் செய்வது மிகவும்  சிறந்தது

இன்றைய தினத்தில், இறை சிந்தையுடன்  யாரிடமும் பேசாமல் மவுனமாக கோபம் கொள்ளாமல் இருந்து வந்தால்,சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பதில் ஐதீகம்.

click me!