காலை உணவாக மொறுமொறுனு சுவையான சோள தோசை.. ரெசிபி இதோ!

Published : Sep 13, 2024, 06:00 AM IST
காலை உணவாக மொறுமொறுனு சுவையான சோள தோசை.. ரெசிபி இதோ!

சுருக்கம்

Sola Dosai Recipe : இந்த பதிவில் மக்காச்சோள தோசை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

பொதுவாகவே தென்னிந்தியாவில் காலை உணவாக இட்லி, தோசை தான் இருக்கும். அதுவும் நீங்கள் தோசை பிரியரா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்காக தான். தேசைகளில் பலவகைகள் உண்டு. உதாரணமாக, வெங்காய தோசை, ரவை தோசை, மசாலா தோசை என பலவகைகள் உண்டு. அந்தவகையில், இன்று வித்தியாசமான சுவையில் தோசை ஏதாவது சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால், சுவையான மக்காச்சோள தோசை செய்து சாப்பிடுங்கள்.

மக்காச்சோளம் மாவு கொண்டு இந்த தோசை செய்யப்படுவதால், மொறு மொறுப்பாகவும், சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை  இந்த தோசையை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுங்கள். அவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் மக்காச்சோள தோசை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:  இனி வீட்டிலேயே செய்யலாம் சுவையான மசாலா தோசை... ரெசிபி இதோ!!

மக்காச்சோள தோசை செய்ய தேவையான பொருட்கள் : 

சோள மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
கடுகு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க:  காலை டிபனுக்கு மொறு மொறுன்னு டேஸ்டான சிறுதானிய தோசை.. ரெசிபி இதோ!

செய்முறை :

மக்காச்சோள தோசை செய்ய முதலில், ஒரு ஆழமான பாத்திரத்தில் எடுத்து வைத்த அரிசி மாவு, சோள மாவு ஆகியவற்றை போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடையை வைத்து அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அதில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்த மாவை ஊற்றவும். பிறகு மாவின் மீது துருவி வைத்த கேரட்டை சேர்க்க வேண்டும். அதன் பின் தோசையை இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான சோள மாவு தோசை தயார். இந்த தோசைக்கு நீங்கள் சாம்பார், கார சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!
யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்