
திரைப்பட காமெடி நடிகர் செந்தில் மற்றும் அவரது குடுபத்தாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து செந்தில் தனது குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் செந்தில் அதிமுக சார்பாக தமிழகத்தில் சில பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது மகன் சாலிகிராமம் பகுதியில் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.