
நாம் நீண்ட தூரம் பயணிக்கும் போது, சில சமயத்தில் வழி தெரியாமல் யாரிடமாவது கேட்பது உண்டு. அதுவும் இரவு நேரத்திலோ அல்லது ஆள் நடமாட்டம் இல்லாமலோ நிருந்தால் எப்படி வழி கேட்பது ? எந்த திசையில் செல்ல வேண்டும் ? என பல கேள்விகள் எழும்.
இதுபோன்ற சமயத்தில், நாம் செல்லும் வழியில் உள்ள மைல் கல்லை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம். நாம் எந்த சாலையில் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பதை...
பொதுவாகவே சாலையில் உள்ள மைல் கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை , பச்சை, நீலம், பிங்க் என பல நிறங்களில் மைல் கல்லை பார்த்து இருப்போம்
மைல்கல்லின் நிறம் மற்றும் சாலை
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் - தேசிய நெடுஞ்சாலை
பச்சை மற்றும் வெள்ளை நிறம் – மாநில நெடுஞ்சாலை
நீலம் மற்றும் வெள்ளை நிறம் – மாவட்ட சாலை
பிங்க் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறம் - ஊரக சாலை அல்லது கிராம புற சாலை என புரிந்துக்கொள்ளலாம்.
இவ்வாறு நாம் பயணிக்கும் வழியில் உள்ள , மைல் கல்லை வைத்தே அது எந்த சாலை என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.