வெயிலை சமாளிக்க ஆட்டோவின் மேற்புறத்தில் பூந்தோட்டம்..! ஜில் ஜில் காற்றுடன் உற்சாகம்..!

Published : Apr 03, 2019, 06:47 PM IST
வெயிலை சமாளிக்க ஆட்டோவின் மேற்புறத்தில் பூந்தோட்டம்..! ஜில் ஜில் காற்றுடன் உற்சாகம்..!

சுருக்கம்

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார்.

கோடை காலம் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பித்துக்கொள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ரிக்ஷாவின் மேற்பகுதியில் அழகான சிறிய தோட்டம் அமைத்து வளர்த்து வருகிறார்.

கொல்கத்தாவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் நபர் பிஜோய் பால்.இவர் மரங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "மரங்களை பாதுகாத்து உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்ற பொன்மொழியை தன்னுடைய ஆட்டோவில் பின் பக்கமாக எழுதி வைத்தும், ஆட்டோவின் மேற்புறத்தில், அசந்து போகும் அளவிற்கு சிறிய செடிகளை வளர்த்து அழகிய பூந்தோட்டமாக வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,"எங்கு சென்றாலும் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது என்றும்,எவ்வளவு வெயில் அடித்தாலும் அதிலிருந்து மிக எளிதாக தப்பித்துக்கொள்ள முடியும்.. அதேவேளையில் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மேலும் இதை ஒரு விளம்பரமாக கருதாமல் பசுமை ஆர்வலர்கள் உருவாக வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் மரங்களை அழிக்காமல் ஒவ்வொருவரும் மரத்தை பேணிக்காக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளேன்" என அவர் தெரிவித்து உள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!