கர்நாடகத்தில் ரூ. 88 கோடி செலவில் செயற்கை மழை...! அப்போ தமிழ்நாட்டுக்கு கோவிந்தா தானா..?

Published : May 16, 2019, 01:21 PM IST
கர்நாடகத்தில் ரூ. 88 கோடி செலவில் செயற்கை மழை...! அப்போ தமிழ்நாட்டுக்கு கோவிந்தா தானா..?

சுருக்கம்

ரூபாய் 88 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழை பெய்விக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.  

ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை..!  

ரூபாய் 88 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழை பெய்விக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு 5 நாட்கள் தாமதமாக, வரும் ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழையால் மைசூர் குடகு உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்குவதால் எதிர்பார்த்த அளவுக்கு மழை வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு செயற்கை மழை பெய்விக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூபாய் 88 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நவீன விமானங்களை கொண்டு வந்து, அதனுடைய இறக்கை மற்றும் ரேடார் கருவிகளை கொண்டு மேகத்தில் செயற்கை மழை காண ரசாயனப் பொடிகள் துருவியது பின்னர் செயற்கை மழையை பெய்ய செய்தனர்.

அதே போன்று இந்த ஆண்டும் செயற்கை மழையை உருவாக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் செயற்கை முறையில் மழை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழையை உருவாக்குவது குறித்து முதல்வர் குமாரசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துணை ஆணையர்கள் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!